எரிபொருளுக்கான குடும்ப அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும் : சரவணபவான் வலியுறுத்தல்

Batticaloa Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis
By Jenitha Jun 26, 2022 11:42 PM GMT
Report

அரசாங்க அதிபர் அரசியல் கட்சிக்கு சூழ்நிலை கைதியாக இருக்காது பொதுமக்கள் நலன் சார்ந்து சில தீர்மானங்கள் எடுக்கவேண்டும் எனவும் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ரி. சரவணபவான் தெரிவித்துள்ளார்.

மட்டு. மாநபகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைக்கு எரிபொருள் விநியோகம்

எரிபொருளுக்கான குடும்ப அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும் : சரவணபவான் வலியுறுத்தல் | Implement A Family Card For Fuel Supply

மட்டக்களப்பில் எரிபொருள் நிலையத்துக்கு முன்னாள் மிக நீண்ட வரிசையில் நாட்கணக்கில் மக்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் காரணமாக எரிபொருளில் எமது மக்கள் பாரிய சிக்கலை எதிர் நோக்கிவருகின்றனர்.

அதனை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதேச செயலக மட்டத்தில் கூடி குடும்ப அட்டை மூலமாக எரிபொருளை விநியோகிக்க முன்மொழிந்தோம்.

அதனை முன்னெடுக்கும் போது பதுக்கள் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பு போன்றவற்றை தவிர்திருக்கலாம் இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்தக் கூடியவளவு குடும்ப அட்டையை முன்மொழிந்தோம். அதனை மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடும் போதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்வைத்தோம்.

இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்த செயலி ஒன்றையும் தயாரித்தோம் இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த குழறுபடியும் இல்லாதவாறு இந்த எரிபொருளை விநியோகத்தை சீராக்கி இருக்கலாம்.

மட்டக்களப்பு எரிபொருள் நிலையத்தில் இடம்பெறும் மோசடி: ஏமாற்றத்தில் மக்கள் (Video) 

ஆனால் இதுவரை அந்த தீர்மானம் நடைமுறைத்தப்படவில்லை. இதுவரை குடும்ப அட்டைக்கான எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனவே இதற்கு அரசாங்க அதிபர் சரியான அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக இந்த முறையையை பின்பற்றாமல் தாமதிக்கின்றாரா என சந்தேகம் ஏற்படுகின்றது.

எல்லா எரிபொருள் நிலையத்துக்கு முன்னாள் நீண்ட வரிசையில் நாட்கணக்கில் மக்கள் காத்திருந்து எரிபொருளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். எனவே அரசாங்க அதிபர் அரசியல் கட்சிக்கு சூழ்நிலை கைதியாக இருக்காது பொதுமக்கள் நலன் சார்ந்து சில தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

அப்படி எடுக்கும் போது தான் எங்களால் முன்மொழியப்பட்ட நடைமுறையை அவர் பின்பற்றும் போது அதனை பிரதேச செயலாளர்கள் பின்பற்றுவார்கள் அதற்கான ஆதரவை அரசாங்க அதிபர் அந்த பிரதேச செயலாளருக்கு வழங்கவேண்டும்.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த விநியோகம் சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அரசாங்க அதிபர் எங்களால் முன்மொழியப்பட்ட குடும்ப அட்டைக்கு விநியோகிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியாது.

எனவே இவ்வாறான விடயங்களை அவர் தவிர்த்து உடனடியாக குடும்ப அட்டைக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அதேவேளை முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்மொழியப்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவது நல்ல விடயம்.

ஆனால் இலங்கையில் பொருளாதாரத்தின் முதுகொலும்பாக இருக்கின்ற தனியார் துறையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படவில்லை.

தனியார் துறை

எரிபொருளுக்கான குடும்ப அட்டையை நடைமுறைப்படுத்த வேண்டும் : சரவணபவான் வலியுறுத்தல் | Implement A Family Card For Fuel Supply

இலங்கையில் வேலைவாய்ப்பை வழங்குகின்றதுறையில் 82 வீதம் தனியார் துறையின் ஆகவே அதிகமானவர்கள் தனியார் துறையில் இருக்கின்றனர் எனவே அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் முன்னுரிமை பட்டியலில் தனியார் துறையினரையும் சோத்துக் கொள்ள வேண்டும்.

அதேவேளை இதற்கு மேலதிகமாக நிவாரணங்களை வழங்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட இதில் புறக்கனிக்கப்படுகின்றனர் அவர்களையும் சோத்துக் கொள்ளவேண்டும்.

நாங்கள் இந்த மாநகரசபையை பொறுப்பு எடுத்துக் கொண்ட போது முச்சக்கரவண்டிகளை பதியுமாறு கோரினோம் முச்சக்கரவண்டிகள் சங்கங்கள் பலமாக இருந்திருந்தால் எங்களுடன் பதிந்திருந்தவர்கள் ஊடாக வலுவான கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.

எனவே முச்சக்கரவண்டி சங்கம் ஒன்றாக பதிவு செய்து அவர்களும் தங்களது கோரிக்கையை முன்வைத்து தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூடாத காரணத்தால் சில விடயங்களை தள்ளிபோட்டிருந்தோம்.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதன் காரணத்தால் அங்கு பாதுகாப்பு கேள்விகுறியாக இருந்த நிலையில் நாங்கள் கடந்தவாரம் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டோம் அதில் 5 விடயங்களை சோதனை நடாத்தினோம்.

அதில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எந்த விடயமும் சரியான முறையில் இல்லாத காரணத்தால் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் ஒட்டினோம் இவ்வாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதை அரசாங்க அதிபர் கண்காணிக்க வேண்டும்.

அதேவேளை சரியான முறையில் எல்லா பிரதேசங்களுக்கும் எரிபொருளை வழங்க வேண்டியது அரசாங்க அதிபருக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவே அதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம் 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US