இலங்கைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அந்நியச் செலாவணி சுமை ஏற்படாத வகையில், எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு தமது தாய் நிறுவனங்களிடம் இருந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு எரிபொருளை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 200 நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்குமாறு இந்தியன் எண்ணை நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri