மின்சார விநியோகத்தில் பாதிப்பு: பொது பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.
அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் பொது அமைதியின்மை ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் அதனால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் ஊடாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்வு காண முடியாது என அமெரிக்கா உள்ளிட்ட 35க்கும் அதிக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,