இலங்கைக்கு விரையும் ஐரோப்பிய நாடுகளின் நிபுணர் குழு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால், கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு நிபுணர் குழு நேற்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த வெளிநாட்டு நிபுணர் குழுவுடன் கப்பல் தீப்பற்றிய பகுதிக்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் குழுவொன்றும் சென்றுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த இருவரும் ,இத்தாலியைச் சேர்ந்த ஒருவரும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த விசேட நிபுணர் குழுவில் அடங்குகின்றனர்.
இவர்களுடன் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் தொடர்பான நிகழ்வுகளுக்கான இணைப்பதிகாரி ஒருவரும் இந்த ஆய்வுகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.