வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு
அரசாங்கத்தினால் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் இடம்பெற்று வருகின்ற நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரனின் வழிகாட்டலில் மாவட்டத்தில் உள்ள பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வாழைச்சேனை பிரதேச சபை நூலகம், கல்குடா கிளினிக் நிலையம், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன.
தடுப்பு ஊசி ஏற்றும் பணியில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.




தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 11 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
