நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையொன்றை சுகாதார திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்றைய தினம் (14.06.2023) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.
சரும பராமரிப்பு
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இயற்கையான முறையில் சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது.
சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை (கிரீம்) பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
