ரஸ்யாவுக்கு உக்ரைன் போன்று இந்தியா, இலங்கையின் வடக்கை பார்க்கிறதா? எழும் கேள்விகள்!
அரசாங்கம், காலதாமதித்து சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுள்ளபோதும் அதனால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முழுமை தீர்வை உடனடியாக எதிர்பார்க்கமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில இதழ் ஒன்றின் ஆசிரியர் தலையங்கமும் இதனை சுட்டிக்காட்டுகிறது.
ஐஎம்எப் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருகிறது.
அதில் ஒரு பரிந்துரையே டொலருக்கு எதிரான ரூபாவின் நாணயப் பெறுமதியை குறைக்கும் செயற்பாடாகும்.
இலங்கையில் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக இதனை மேற்கொண்டாலும், உள்ளூரில் இதன்காரணமாக பாரிய விலையுயர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியேற்படும்.
இது அரசியல் ரீதியாக பொருளாதாரத்தை இயக்கி வந்த இலங்கை அரசாங்கத்துக்கு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தவே செய்யும.;
ஜனாதிபதி தமது தேசிய உரையில் முன்னைய அரசாங்கத்தின் அதிக கடன் பெறல் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினாலும், அந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தில் தற்போதைய ஜனாதிபதியும் ஒருவராக இருந்தார் என்பதை மறுக்கமுடியாது.
அத்துடன் பாரிய கடன்களை பெற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களே இன்று கோட்டாபய அரசாங்கத்திலும் முக்கிய பொறுப்பை வகிக்கின்றனர்.
அவர்கள் மீது ஜனாதிபதி முழு நம்பிக்கையை கொண்டிருக்கிறார்.
அதேவேளை பழைய கடன்களுக்காக ஜனாதிபதி முன்னைய அரசாங்கங்களை தூற்றினாலும், இயற்கை பசளை அறிமுகம், அதனால் விவசாயத்துறையின்; வீழ்ச்சிக்கு ஜனாதிபதியே முழுமைப் பொறுப்பை ஏற்கவேண்டும்.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் ஆளுநருக்கும் நிதியமைச்சருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வருவதற்கு இருவரும் கூட்டாகவும் தனியாகவும் குற்றவாளிகளாகவே கருதப்படவேண்டும்.
இந்த சூழ்நிலையில் கசப்பான நடைமுறையாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியம் கூறுகின்ற விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்.
எனவே கோட்டாபய ராஜபக்ச, தெரிவுசெய்துள்ள சர்வதேச நாணய நிதியம் என்ற முடிதிருத்தும் சலூனிலேயே முடியை திருத்தவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
இதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, ஒரு பில்லியன் டொலர்களை பையில் வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து திரும்பியுள்ளார்.
எனினும் அவர் அந்த நிதியை பெற்றுக்கொண்டமையின் பின்புலத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் அம்சங்கள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை.
கொழும்பிலும் புதுடில்லியிலும் உள்ள அந்தந்த தூதரகங்களில் இருந்து சில மேலோட்டமான கணக்குகளைத் தவிர, இதுவரை செய்துக்கொள்ளப்பட்ட் ஒப்பந்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
இலங்கையின் வடக்கு மாகாணம் அதற்கு “கவனம் செலுத்தும் பகுதி” என்று இந்திய தரப்பு ஏற்கனவே கூறியுள்ளது.
எனவே இது உக்ரைனை நோக்கிக் காட்டப்படும் ரஸ்யாவின் கவனம் என்பதுடன் ஒப்பிடத்தக்கதா? என்று ஆங்கில இதழின் ஆசிரியர் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
