இலங்கைக்கு கிடைத்துள்ள 200 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி
தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகள், இலங்கைக்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள அவர், நேற்று(17) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
கடும் பொருளாதார நெருக்கடி
பேரழிவு மீட்புப் பணிகளுக்கு நிதியுதவி இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வரும் வேளையில் ஏற்பட்ட 'டித்வா' (Dithwa) இயற்கை அனர்த்தம் குறித்துத் தனது வருத்தத்தைத் தெரிவித்த கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகச் சர்வதேச நாணய நிதியம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அவசர நிதி உதவியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு, வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஜனாதிபதியின் நிலைப்பாடும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது பாராட்டினார்.
நாடு எதிர்கொண்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஐ.எம்.எப். வழங்கிய ஒத்துழைப்பே, 'டித்வா' போன்ற பாரிய அனர்த்தங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் பலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி உறுதி
"முன்னர் இருந்தது போன்று அரசியலையும் பொருளாதாரத்தையும் அரசாங்கம் குழப்பிக் கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த இலக்கு" என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

விவசாயம் மற்றும் கிராமியப் பொருளாதார மாற்றம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கிராமப்புறங்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்தவும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முக்கியஸ்தர்கள் பங்கேற்பு இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிஷாந்த ஜயவீர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை

சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan