ஜனாதிபதி அநுரவை முதல் தடவையாக சந்திக்க வரும் சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் புதிய அரசியல் தலைமை,சர்வதேச நாணய நிதியத்துடன் தனது நிதித் திட்டத்தைத் தொடர்வதற்காக விரைவான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குத் தயாராகி வரும் நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் அவசியத்தை உணர்ந்து இந்த சந்திப்பு நிகழவுள்ளது.
இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மை
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் தலைவர் ஜூலி கோசாக்கின் கூற்றுப்படி, இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அக்டோபர் நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது,
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் வரவிருக்கும் பணியாளர்களின் வருகையானது ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பிடும்.
மேலும் இது நவம்பரில் எதிர்பார்க்கப்படும் அடுத்த நிதியுதவி வழங்கப்படுவதை அந்த குழு தீர்மானிக்கும்.
இதற்கிடையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், அரசாங்கம் தற்போதைய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை பின்பற்றினால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் பத்திரப் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வது இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
