சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதி கிடைத்தது
சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான கடன் வசதியை அங்கீகரித்த ஐஎம்எப்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.