ஐ.எம்.எப்பின் கடன் என்பது ராஜபக்ச குடும்பத்தின் பாட்டன்மார் வழங்கும் பணம் அல்ல: இராமலிங்கம் சந்திரசேகர் (video)
ஐ.எம்.எப்பின் கடன் என்பது ராஜபக்ச குடும்பத்தின் பாட்டன்மார் வழங்கும் பணம் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகமொன்றில் இன்று (24.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதிய கடனுதவி கிடைக்க பெற்றுள்ளதால் ரணில், ராஜபக்சர்களை வாழ்த்தி பாடுபவர்கள் பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
ஐ.எம்.எப்பின் கடன் தொகை
இந்த விடயம் நயப்புக்குரியது. ஏனெனில், கடன் வாங்கியதற்காக பட்டாசு கொளுத்தி கொண்டாடும் நாடாக இருப்பது இலங்கை மட்டுமே.
இந்த கடன் தொகையை ராஜபக்சர்களின் பாட்டன்மார்களோ அல்லது ரணிலின் மாமனாரோ செலுத்தப்போவதில்லை.
இதற்காக நாட்டு மக்களின் உழைப்பும், உதிரமும் உறிஞ்சி எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam