ஐ.எம்.எப்பின் கடன் என்பது ராஜபக்ச குடும்பத்தின் பாட்டன்மார் வழங்கும் பணம் அல்ல: இராமலிங்கம் சந்திரசேகர் (video)
ஐ.எம்.எப்பின் கடன் என்பது ராஜபக்ச குடும்பத்தின் பாட்டன்மார் வழங்கும் பணம் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகமொன்றில் இன்று (24.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதிய கடனுதவி கிடைக்க பெற்றுள்ளதால் ரணில், ராஜபக்சர்களை வாழ்த்தி பாடுபவர்கள் பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
ஐ.எம்.எப்பின் கடன் தொகை
இந்த விடயம் நயப்புக்குரியது. ஏனெனில், கடன் வாங்கியதற்காக பட்டாசு கொளுத்தி கொண்டாடும் நாடாக இருப்பது இலங்கை மட்டுமே.
இந்த கடன் தொகையை ராஜபக்சர்களின் பாட்டன்மார்களோ அல்லது ரணிலின் மாமனாரோ செலுத்தப்போவதில்லை.
இதற்காக நாட்டு மக்களின் உழைப்பும், உதிரமும் உறிஞ்சி எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
