சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்: எதிர்கால இலக்கு தொடர்பில் சஜித் ஆரூடம்
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றை(13) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இதன்போது மக்கள் மீது சுமை ஏற்படாத வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டை எதிர்க்கட்சி விரும்புகிறதா என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், சஜித் பிரேமதாசவை சந்தித்தபோதும், தற்போதைய உடன்பாடு தமது அரசாங்கத்தின் கீழ் திருத்தப்படும் என்று சஜித் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam