அங்கொடையில் முதியோர் இல்லத்தில் 29 பேருக்கு கோவிட் தொற்று
அங்கொடையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 29 பேருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
முதியோர் இல்லத்தில் இருந்த ஒருவர் கோவிட் தொற்றி உயிரிழந்ததை அடுத்து அங்குள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த பரிசோதனைகளின் படி முதியோர இல்லத்தில் தங்கியுள்ள 27 பேர், அதன் முகாமைத்துவத்தில் பணியாற்றும் இருவருக்கு கோவிட் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பேர் முதியோர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கொடை பொது சுகதார பரிசோதகர் அஜித் விதானகே கூறியுள்ளார்.
ஒருவர் முதியோர் இல்லத்தில் இருந்து வெளியில் சென்று வருபவர் எனவும் இவர் மூலம் அனைவருக்கும் கோவிட் தொற்றியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
