சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு: அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை

Douglas Devananda Sri Lanka Politician Sri Lankan political crisis
By Theepan Sep 28, 2023 03:29 AM GMT
Report

வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டால் கஞ்சா வழக்குப் போடப்படும் என்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று (27.09.2023) மாலை நடந்த விசேட கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்பட்டது.

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு: அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை | Illegal Sand Mining Issues Douglas Devananda

அதையடுத்து இந்த விடயத்தை ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில், குடத்தனைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. அங்கு பொலிஸ் காவலரண்கள், இராணுவக் காவலரண்கள் இருந்தும் மணல் அகழ்வைத் தடுக்க முடியவில்லை.

மணல் அகழ்வை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு


சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு பொலிஸ் ரோந்து நடவடிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் பதிலளித்த நிலையில், அங்குள்ள சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்ற விடயம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு: அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை | Illegal Sand Mining Issues Douglas Devananda

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தால், அந்த விடயம் உடனடியாகவே மணல் கடத்தல்காரர்களுக்குத் தெரியவருகின்றது. சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாகப் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்த போதும், தற்போது வரை சட்டவிரோத மணல் அகழ்வு இரவு, பகலாக நடந்துகொண்டிருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

யாழில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சட்டரீதியான அனுமதி பெற்று மணல் அகழ்வு மேற்கொள்பவர்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுடன் சேர்ந்து செயற்படுவதில்லை.

கஞ்சா வழக்கில் கைது

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் என்று இனங்காணப்படுபவர்கள் அங்குள்ள பொது அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான மணல் அகழ்வு அனுமதியைக் கொண்டு மணல் அகழ அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் அவர்களையும் இணைத்து மணல் அகழ்வில் ஈடுபட வேண்டும் என்று அங்குள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் கஞ்சா வழக்கில் கைது செய்வேன் என்றும் மிரட்டுகின்றார் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு: அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை | Illegal Sand Mining Issues Douglas Devananda

இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்தார். அச்சுறுத்தல் விடுத்தார் என்று கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுகின்றது என்று இனங்காணப்பட்ட இடங்களில் பொலிஸ் காவலரண்களை அமைக்கவும், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

யாழில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி (Video)

யாழில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி (Video)

இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் முன்னேற்றம் தொடர்பாக 10 நாள்களின் பின்னர் ஆராயப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், ஜனாதிபதியின் வடமாகாண ஒருங்கிணைப்புச் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலர்கள்,நீரியல்வளத்துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US