சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு
நாட்டில் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு காரணமாக விலைகள் உயர்வடைந்துள்ளன.
இதனால் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக சட்ட ரீதியான மதுபான வகைகளுக்கான கேள்வியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
வருமான இலக்குகளை அடைவதில் சிரமம்
இதனால் மதுவரித் திணைக்களத்திற்கு வருமான இலக்குகளை அடைவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அரசாங்கம் 232 பில்லியன் ரூபா என்ற வருமான இலக்கினை வழங்கியுள்ளது.
எனினும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மதுவரித் திணைக்களத்தின் மொத்த வருமானம் வெறும் 33 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபானம் அருந்திய பலர் விலை அதிகரிப்பு காரணமாக சட்டவிரோத மதுபான வகைகளை நுகரத் தொடங்கியுள்ளதாகவும் சிலர் மதுபான நுகர்வினை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam