சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது
வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பிரதேசத்தில், தொல்பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப்பிரிவு இன்றைய தினம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெலிக்கந்த, குளியாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 23, 29, 33, 37, 59 வயதுகளையுடைய அறுவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் அகழ்வு பணிக்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.