கிளிநொச்சியில் அரசியல் செல்வாக்குடன் சட்டவிரோத காடழிப்பு! இளைஞரொருவர் மீதும் தாக்குதல்
கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியில் அரசியல் செல்வாக்குடன் இரவுவேளையில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களால் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று முன்தினம் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கனரக வாகனத்தை பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபட்ட சமயம் அதனை அவதானித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளார்.
இதன்போது குறித்த அனுமதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் தமக்கு அந்த காணியை வழங்கியதாக தெரிவித்து குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சாரதி மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதில் பொலிஸார் அசமந்தப்போக்கை காட்டி வருவதாக அறிய முடிகின்றது.


புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
