மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம்
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
முனைக்காடு, வாவிகரை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்றையதினம் (06.01.2024) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவிலான கோடா, 9 பெரல்கள் மற்றும் ஏனைய கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய சந்தேகநபர்கள்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமானவின் ஆலோசனைக்கமைய குறித்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை கண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam