கனடாவில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகள்
கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இளைஞர்களை இலக்கு வைத்து இணைய வழியில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகள்
குறித்த விடயம் தொடர்பில் ஒன்றாரியோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஒன்றாரியோவின் ஒரில்லா நகரில் மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இணைய வழியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் செலுத்த தவறிய மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் Topbets என்ற இணைய தளத்தின் வழியாக இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |