பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் மீது சைபர் தாக்குதல்
பிரித்தானிய(UK) இராணுவத்தின் தனிப்பட்ட தகவல்கள் சைப்பர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை சைப்பர் தாக்குதல் மூலம் திருடப்பட்டதை அவதானித்ததாக பிரித்தானிய தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தாக்குதல்களுக்கான பின்னணி தொடர்பில் பிரித்தானியா எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
சீன சைபர் தாக்குதல்
பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு ஊதிய முறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் சீன(China) சைபர் தாக்குதலுக்கான அனைத்து அடையாளங்களும் இருப்பதாக முன்னாள் அந்நாட்டின் இராணுவ வீரரும், நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார்.

ஊதிய முறையின் பெயர்கள் மற்றும் சேவை பணியாளர்களின் வங்கி விவரங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பெயர்கள், வங்கி விவரங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சேவையில் உள்ள மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களின் தனிப்பட்ட முகவரிகள் திருடப்பட்டதாக பிரித்தானிய தரப்பால் நம்பப்படுகிறது.

எனினும், இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்றும் அனைத்து வகையான சைபர் தாக்குதல்களை எப்போதும் கடுமையாக எதிர்க்கிறது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam