கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதி
பர் ஏ.சந்திரசேன ,உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள்,இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கனிய வளத்திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தவது தொடர்பாகவும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல் பற்றிய மாவட்ட அரசாங்கதிபரின் குரல் பதிவும் உள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam