மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos)

Sri Lankan Tamils Mannar Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Sri Lankan political crisis
By Ashik Mar 19, 2023 10:00 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தமிழரசு கட்சியிலிருந்து ஓரங்கட்ட நினைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்ட நிர்வாகத் தெரிவை முடிக்கவேண்டும் என கூறப்படுகின்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னரே புதிய நிர்வாகம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

அதேவேளை, கட்சியின் யாப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடையில் மத்திய கூட்டம் ஒன்றை நடத்தி அதைத் திருத்தி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

தனக்கே தெரியாது

மேலும் உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவில் திருகோணமலையில் சம்பந்தனிற்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதனால் அதனை ஆராயுமாறு  சம்பந்தன் தன்னிடம் கூறியதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியதாகவும், அதைப் விசாரிப்பதற்கு மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமையிலான ஒழுக்காற்றுக் குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவில் யாழ்ப்பாணத்தில் தன்னைப் புறக்கணித்தமை குறித்து மாவை தனது நீண்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். அதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  குறிவைத்தே தனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் தான் கட்சியில் இருக்கிறேனா என தனக்கே தெரியாது என்றும் இத்தனை வருடமாக இவ்வாறானதொரு விடயம் நடக்கவில்லை என்று மாவை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் குகதாசன் குறிப்பிடுகையில் இரா.சம்பந்தன் தொடர்பில் குழு அமைத்து திருகோணமலை மாவட்டத்தில் ஆராய்வதற்கு விசேட குழு அமைப்பது நல்ல விடயம் ஆனால், இரா.சம்பந்தன் மாவட்டத்திற்கே வருவதில்லை என்பதையும் கூற விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார். 

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

முதலாம் இணைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது. 

குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

கட்சியின் செயற்பாடுகள்

இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச்செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மாவை - சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! (Photos) | Illankai Tamil Arasu Kachchi Meeting In Mannar

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US