அநுரவிற்கு வழங்கப்பட்ட வாக்குகள் என்பது ரணில் ராஜபக்சக்களுக்கு எதிராக வழங்கப்பட்ட வாக்குகளே!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியானது ரணில் மற்றும் ராஜபக்சக்களின் கொடூரமான ஆட்சிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் என ஐக்கிய இடதுசாரி கூட்டணியின் தலைவர் சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த கால அரசியல் தலைவர்களாலோ நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ எந்த நியதியும் நீதியும் கிடைக்காத நிலையிலேயே தற்போது மக்கள் தேசிய மக்கள் சக்தியினை தெரிவு செய்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கும் கொடுமைகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்வுகளை பெற்று கொடுப்பார் என எதிர்பார்த்தே மக்கள் வாக்களித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri