மொனராகலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
மொனராகலை பிரதேசத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மொனராகலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா செடிகள் மீட்பு
குறித்த நபரிடமிருந்து 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் அத்தியட்சகரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஜீப் வண்டியொன்று என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
