இழப்புகள் குறித்து சிந்தித்துக்கொண்டு இருப்போமானால் நாங்கள் கோளைகளாக மாறும் நிலையே உருவாகும்: கே.கருணாகரன் (VIDEO)
இழப்புகள் குறித்து சிந்தித்துக்கொண்டு இருப்போமானால் நாங்கள் முன்னேற்றமடையாதவர்களாகவும் கோளைகளாகவும் மாறும் நிலையே உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
சுபிட்சத்தின் நோக்கு " கொள்கைத் திட்டத்தில் தொழிற்படையின் ஆற்றல்கள், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுவதை நோக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின், ஜனாதிபதியின் தேசிய கொள்ளை பிரகடனமாகிய “சுபிட்சத்தின் நோக்கு " கொள்கைத் திட்டத்தில் தொழிற்படையின் ஆற்றல்கள், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் நிகழ்வு கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி திட்டம் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் கோவிட் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்நிலை மூலமாக நடைபெற்றிருந்தன.
"நாட்டிற்குச் சுமை இல்லாத உழைக்கும் தலைமுறை "எனும் தொனிப்பொருளில் "தொழில் வழிகாட்டலை சமூகமயமாக்குதல்" எனும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம் மற்றும் வினாவிடை போட்டி போட்டி என்பன நடைபெற்றிருந்தன.
இப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று எமது மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த சாதனையாளர்களையும், மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்பெற்றவர்களுக்கான பணப் பரிசுகளும், சான்றிதழ்களும் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
கோவிட் காலப்பகுதியில் பல்வேறு மன அழுத்தங்களுக்குள்ளும் ஆளாகியிருந்த
மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளும் ஆர்வத்துடன் தேசிய தொழில் வழிகாட்டல்
போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

2 ரன்னில் இருந்த தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கோபமடைந்த மெண்டார் கம்பீர் வீடியோ News Lankasri

மொத்தமாக 8000 உக்ரைனிய வீரர்கள்...ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்த பகீர் தகவல்! News Lankasri

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022