ரணில் இல்லையேல் மீண்டும் போராட்டம் வெடிக்கும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) ஆட்சியில் தொடராவிட்டால் மீண்டும் 'அரகலய' போராட்டம் வெடிக்கும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் தற்போதைய நிலைமையில் நாட்டை ஆளக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான்.
சர்வதேச உதவிகள்
அவர் ஆட்சியில் தொடர வேண்டும். அவர் இல்லையேல் மீண்டும் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடையும். மீண்டும் 'அரகலய' போராட்டம் வெடிக்கும்.

அரகலய போராட்டத்தின் விளைவாகவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறிச் செல்லும். சர்வதேசமும் எமது நாட்டுக்கு உதவிகளை வழங்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நம்பித்தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குகின்றது என்பதை நாட்டிலுள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri