அரசாங்கம் பாதையை மாற்றவில்லை என்றால் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் - ருவான் விஜேவர்தன
அரசாங்கம் செல்லும் பாதையை தற்போது மாற்றிக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் நாடு பல பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்பில்லை என்பதை சர்வதேச உணர்ந்துக்கொண்டால், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கை பாதகமான அழுத்தங்கள் ஏற்படக் கூடும் எனவும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சூம் தொழிநுட்பத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே விஜேவர்தன இதனை கூறியுள்ளார்.