ஏர்முனை மடங்கினாலும்,பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் : மு.முகுந்தகஜன் (Photo)
ஒரு நாட்டில் ஏர்முனை மடங்கினாலும், பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுபினர் மு.முகுந்தகஜன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதிற்கு கண்டம் தெரிவிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்டடையினை வன்மையாக கண்டிப்பதுடன் கடந்த காலங்களிலும் பல சந்தர்பங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் பல தடவைகள் கண்டனப்பிரேரணைகள் நிறைவேற்றியுள்ளேன்.
எனவே தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக சுதந்திரத்தின் மீதும் இடம்பெறுகின்ற வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்.
ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரு நாட்டில் ஏர்முனை மடங்கினாலும், பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் என்பார்கள்.
இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்குதலுக்கு உள்ளானதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri