மட்டக்களப்பில் மிதிவெடி மீட்பு
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி வயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட மிதிவெடி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த மிதிவெடியானது நேற்று (20) இரவு மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசடி நெற் களஞ்சியசாலைக்கு முன்னால் உள்ள வயல் நிலத்தை வேளாண்மை செய்கைக்காக சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் உழுது பண்படுத்தி கொண்டிருந்தபோது அங்கு புதைக்கப்பட்டிருந்த மிதிவெடி ஒன்றை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குறித்த மிதிவெடியை வெடிக்க வைப்பதற்காக நீதிமன்ற உத்தரவை வெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




