குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்: பொலிஸார் விசேட நடவடிக்கை
மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் நால்வரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
பொலிஸார் நடவடிக்கை
குழந்தை தற்போது தனது தாயுடன் மாவனல்லை, அரநாயக்க, எலகஸ்தன்னவில் வசித்து வருவதாகவும், தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தையின் தந்தை தாயை பிரிந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கல்வி கற்கும் வயதாகியும் பாடசாலைக்கு குழந்தை அனுப்பப்படாமல் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தாய் உட்பட இரு வயோதிபர்கள் அவ்வப்போது கொடூரமாக தாக்கி வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், குழந்தையை தாக்கியதாக கூறப்படும் இரண்டு வயோதிபர்கள், குழந்தையின் தாய் மற்றும் தாக்குதலை ஊக்குவித்ததாக கூறப்படும் அயலகப் பெண் ஆகியோர் அரநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
