கிளிநொச்சியில் இராணுவ பயன்பாட்டு பொருட்கள் அடையாளம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த மழை காரணமாகப் புதைந்திருந்த குறித்த பொருட்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த பொருட்கள் இராணுவ உபயோக பொருட்கள் எனவும், அதில் 7 கண்ணிவெடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் அகற்றப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.