இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா : இனவாதத்தை கக்கும் இலங்கையர்கள் (Video)
இந்திய அணியின் தோல்வியை பட்டாசு கொளுத்தியது ஒரு இனவாத செயல் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றது.
ஆறாவது தடவையாகவும் வெற்றி
இதில், இந்திய அணி தோல்வியுற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி ஆறாவது தடவையாகவும் வெற்றிவாகை சூடியது.
இந்தநிலையில், இந்திய அணியின் தோல்வியை கொண்டாடும் விதமாக இலங்கையில் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் இந்த செயல் ஒரு இனவாத செயல் என தற்போது கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு நெருக்கடியான நேரங்களில் இந்தியா எமக்கு பல உதவிகளை செய்துள்ளது.
அப்போது அந்த உதவிகள் இனித்தது. இப்போது கசக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
