இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா : இனவாதத்தை கக்கும் இலங்கையர்கள் (Video)
இந்திய அணியின் தோல்வியை பட்டாசு கொளுத்தியது ஒரு இனவாத செயல் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றது.
ஆறாவது தடவையாகவும் வெற்றி
இதில், இந்திய அணி தோல்வியுற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி ஆறாவது தடவையாகவும் வெற்றிவாகை சூடியது.
இந்தநிலையில், இந்திய அணியின் தோல்வியை கொண்டாடும் விதமாக இலங்கையில் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் இந்த செயல் ஒரு இனவாத செயல் என தற்போது கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு நெருக்கடியான நேரங்களில் இந்தியா எமக்கு பல உதவிகளை செய்துள்ளது.
அப்போது அந்த உதவிகள் இனித்தது. இப்போது கசக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
