நீதிமன்றம் சென்றேனும் இலங்கை கிரிக்கெட்டை மீட்பேன்: அர்ஜுன ரணதுங்க
நீதிமன்றம் சென்று சொந்த பணத்தையேனும் செலவு செய்து இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசாரணை கோரிக்கை
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நிலைமையை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நாட்டைக் காட்டிக்கொடுத்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அமைப்பு உருவாக்கப்பட்டால், ஜனாதிபதி கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நாளை கோரவுள்ளேன். இதைத் தடை செய்ய அடித்தளமிட்டவர்கள் வழங்கிய சாட்சியம் என்ன? அதைச் செய்து நம் நாட்டில் கிரிக்கெட்டை அழிக்க முயன்றது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? என அவரிடம் கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
