இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் ஜூலை தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கலட்டி வீதியில் அமைந்துள்ள மிலேனியம் தனியார் விடுதியில் இன்று(11) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல்நினோ
இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத் தீவு மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.
நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்சியையும் ஏற்படுத்தும்.
அதிகமான வறட்சி
இருந்தாலும் இந்த தாள முக்கங்கள் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வறட்சியே நிலவும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
1503 ஆம் ஆண்டு பெருவில் ஏற்பட்ட எல்நினோ தாக்கம் 1503 ஆம் ஆண்டு உலகில் ஒன்பது இலட்சம் பேரை காவு கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது வரை ஐரோப்பாவில் 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
எல்நினோ தாக்கம் என்பது அதிக வெப்பத்தினால் பாரிய தாளமுக்கங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு மண்சாரிப்புகள் ஏற்படும், அல்லது அதிக வெப்பத்தினால் காட்டுத் தீ மற்றும் எரிமலை குழம்புகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தும்.
2016 ஆம் ஆண்டு இலங்கையில் எல்நினோ தாக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது 74 வருடங்களுக்குப் பின்னர் சூப்பர் எல்நினோ ஏற்பட போகிறது. இலங்கை மற்றும் மாலைதீவுகளில் இதன் தாக்கம் உணரப்படுகின்ற நிலையில், வட மகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கடத் தொழிலாளர்கள் இதன் தாக்கத்தை உணர்வார்கள்.
கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அதிக வெப்பம் காரணமாக கரையோர நீர் சூடாவதால் மீன்கள் இறந்துபோவதுடன் மீன் இனப்பெருக்கமும் குறைவடையும்.
விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான நீரினை பெற்றுக் கொள்வதற்காக போராட வேண்டிய தேவை ஏற்படுவது உடன் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதற்கான நீர் தேவையும் சவால் மிக்கதாக மாறும்.
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
இலங்கையை தாக்கிய டித்வா பேரிடர் ஏற்படும் போது வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட நிலையில் தற்போது எல்நினோ காலத்தில் 30 பாகை வரை வெப்பநிலை அதிகரிக்கும்.
ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன் யாழ் மாவட்ட கடத்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ் அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
You May Like This..