மக்கள் வங்கி கறுப்பு பட்டியலிடப்பட்டது பற்றி எனக்கு தெரியாது: - பசில் ராஜபக்ச
மக்கள் வங்கி கறுப்பு பட்டியலிடப்பட்டது பற்றி தமக்கு தெரியாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுகதனவி மின் நிலையம் தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடாத்திய சந்திப்பு பற்றி இன்னும் யோசிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நல்லதொரு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அதிர்ஸ்டம் கிட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கண்க தலதா மாளிகைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி.....
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கையின் அரச வங்கி! சீன தூதரகம் அதிரடி
சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் வங்கி பதிலடி