வெளிநாடுகளிலிருந்து ஒரு சதத்தைக் கூட நான் கடனாகப் பெற்றுக்கொள்ளவில்லை: கோட்டாபயவின் அறிவிப்பு
நான் ஒரு சதமேனும் வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொண்டதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொனராகல சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன்களுக்காக ஆண்டுதோறும் 6.3 பில்லியன் டொலர் செலுத்த நேரிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சிகள் உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவதில்லை. எனது இரண்டாண்டு ஆட்சியில் நான் ஒரு சதமேனும் வெளிநாட்டுக் கடன் பெற்றதில்லை.
கடந்த அரசாங்கங்களினால் பெற்றுக்கொண்ட 6.3 பில்லியன் கடன்தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த நேரிட்டுள்ளது.
அபிவிருத்தி அல்லது வேறு காரணிகளுக்காக இவ்வாறு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை நாம் ஆண்டு தோறும் செலுத்த நேரிட்டுள்ளது.
கோவிட் காரணமாக சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாரியளவில் குறைந்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பினை பேணும் நோக்கில் சில ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தினோம் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021