புலம்பெயர் சொந்தங்களுக்கு தலை வணங்குகிறேன் - சிறீதரன் எம்.பி!
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தாயக மக்களின் நலன்களுக்காக செலவிடும் புலம்பெயர் சொந்தங்களுக்கு தலை வணங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் உறவுகளின் இந்த சேவை தொடர வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வரும் விதவைப் பெண்ணான நிரவியறாஜ் சிவபாக்கியவதிக்கு இத்தாலி மனிதநேய சங்கத்தால் நிரந்தர வீடொன்று நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.