சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் : நிவாட் கப்ரால் தெரிவித்துள்ள விடயம்
சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தமது தாய் நாடு இலங்கை எனவும் இந்த நாட்டை விட்டு வேறும் ஓர் நாட்டில் குடியேறும் எந்தவொரு திட்டமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வேறும் நாடொன்றில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் நாடொன்றில் நிரந்தரமாக வதியவோ தாம் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம்
சில தரப்பினர் தங்களது விருப்பு வெறுப்புகளுக்காக இவ்வாறு பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து வருவதாக அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது கடவுச்சீட்டு நீதிமன்றின் பொறுப்பில் உள்ளதாகவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan