தலைசிறந்த நாடாக தமிழ் நாட்டை மாற்றிக் காட்டுகின்றேன்! - சீமான்
நாம் தமிழர் கட்சியை வெற்றிபெற செய்தால் இந்த உலகத்தில் மிகவும் தலைசிறந்த நாடாக தமிழ் நாட்டை மாற்றி காட்டுவேன் என அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தனது ஆட்சியில் அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம், தூய குடிநீர், தடையற்ற மின்சாரம், சீரான போக்குவரத்து பாதை, அரச வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுப்பேன்.
அதற்கான வாய்ப்பை தரவேண்டும். உங்கள் மதிப்பு மிக்க வாக்குகளை நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு செலுத்துங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.