மனைவியை சதி செய்து கொன்ற கணவன்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம் ஓர் கொலை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணவரால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிடிகல மானம்பிட்டிய, தல்கஸ்வில நியாகம பிரதேச சபைக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் இருந்த பெண் கடந்த 30ம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இது ஒர் படுகொலை என தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் காப்புறுதி பணத்தை பெறும் நோக்கில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam