வவுனியாவில் கணவன் மாயம்: மனைவி முறைப்பாடு
வவுனியாவில் (Vavuniya) திருமணமாகி ஒரு மாதமான இளம் தம்பதிகளில் கணவனை காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தம்பதிகள் வவுனியா - வேப்பங்குளம், மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த நிலையில் கணவன் கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் முறைப்பாடு
இதன்போது 25 வயதுடைய வில்வராசா ரக்சன் என்பவரே காணாமல் போயுள்ளார்.

பதிவு திருமணம் செய்து ஒரு மாத காலமான நிலையில் அந்த இளம் தம்பதியினர் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி அன்று மனைவியை அவரது பணித்தளத்தில் இறக்கிவிட்டு, தான் தனது பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி இலக்கம்
காணாமல் போன நபரை அடையாளம் காண்பவர்கள் 074-1822912 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போன நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam