இலங்கையில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திய நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று
இலங்கையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திய சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் திணைக்களம் இந்த நிலைமை குறித்து கவலை எழுப்பியதுடன், சுகாதார நிபுணர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான பாதிப்பையும், இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் COVID-19 நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது என்று சுகாதார அதிகாரிகள், பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொலிஸார் அந்தந்த மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, வேகமாக பரவி வரும் டெல்டா மாறுபாட்டால் ஏற்படும் அழிவைத் தடுக்க தடுப்பூசிகள் அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதை தடுப்பூசிகள் தடுக்காது என்றாலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் வைரஸின் கடுமையான பாதிப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் தடுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
