வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுப்பு (PHOTOS)
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஸார்ப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, இதுவரை 2,156,344 சதுரமீற்றர் பரப்பளவில் வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பணிகள் தொடரபில் இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது.

அபாயகரமான வெடிபொருட்களை அகற்றிய இடங்கள்

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஆகஸ்ட் மாதம்16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 2,156,344 இருந்து 33,922 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முகமாலை மற்றும்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்
அம்பகாமம் பகுதியிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri