மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடர்.. அநுர அரசு வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Volker Türk National People's Power - NPP NPP Government
By Rakesh Jul 06, 2025 03:36 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடர் இலங்கைக்குப் பாதிப்பாக அமையாது என்று அநுர அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பல்வேறு சந்திப்புகளையும் விஜயங்களையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அரச தரப்பினருடனான சந்திப்புகளில், இஸ்ரேல் - ஈரான் மோதல் உட்பட இலங்கையின் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடி இருந்தார்.

இது குறித்து அநுர அரசின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் குறிப்பிடுகையில், "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழர் பகுதியில் சோகம்! ஒரே நாளில் நான்கு சிறுவர்கள் பரிதாப மரணம்

தமிழர் பகுதியில் சோகம்! ஒரே நாளில் நான்கு சிறுவர்கள் பரிதாப மரணம்

வோல்கர் டர்க்கின் விஜயம்  

பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளன. இருப்பினும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடர்.. அநுர அரசு வெளியிட்ட தகவல் | Human Rights Council Review Meeting Series

அவர் வழங்கிய உத்தரவாத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடர் இலங்கைக்குச் சாதகமாகவே அமையும். ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளின் இலங்கை விஜயங்களின் போது இதற்கு முன்னர் இருந்த அரசுகளைப் போன்று அல்லாது தற்போதைய அரசு செயற்பட்டிருந்தது.

எமது விஜயத்தின் நோக்கங்களைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் செயற்கையாக எதனையும் செய்யவில்லை என்பது ஆணையாளரின் நிலைப்பாடாக இருந்தது. அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளில் மாத்திரமே ஒழுங்கிணைப்பு ரீதியாக அரசு பங்களிப்பு செய்தது.

ஏனைய சந்திப்புகள் மற்றும் விஜயங்களில் அரசு தலையிட்டிருக்கவில்லை. எனவே, இலங்கையின் தற்போதைய அரசு நேர்மையாகச் செயற்பட்டது என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறிச் சென்றுள்ளார்.

மேலும் இலங்கை வந்த முதல் நாளில் இடம்பெற்ற அரச உயர் மட்டத்தினருடனான சந்திப்பின் போது, இஸ்ரேல் - ஈரான் மோதல் மூன்றாம் உலகப் போராக மாறினால் ஐக்கிய நாடுகள் சபையின் இருப்புக்கே பாதிப்பாகி விடும் என்று ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது" என்றார்.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தென்னிந்திய நடிகர்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தென்னிந்திய நடிகர்

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் போபகே...! வலுக்கும் எதிர்ப்பு

தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் போபகே...! வலுக்கும் எதிர்ப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US