நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த சட்டமூலம் தொடர்பான அவதானிப்புகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் முப்பது பிரிவுகளை குழுநிலை விவாதத்தின் போது திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை
அல்லது சட்டமூலம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் நிபந்தனையாக இருந்தது.
ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் திருத்தம் செய்யாமல் சட்டம் இயற்றப்பட்டிருப்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
மேலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குப் பதில் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி முதலாம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அந்த சட்டமூலத்திற்கு கையெழுத்திட்டு நடைமுறைக்கான அங்கீகாரம் வழங்கியதையடுத்து நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா பிப்ரவரி 2ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் குறித்த சட்டமூலம் உச்சநீதிமன்ற பரிந்துரைகளுக்கு முரணானது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
