ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம்

United Nations Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Sep 09, 2022 06:51 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்  குற்றம் சுமத்தியுள்ளது.

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆயுதமேந்திய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.

அவர் சிறுவர் கடத்தல்களில் ஈடுபட்டவர், அவர் அரசாங்க சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார். அது கடத்தல் மற்றும் குழந்தை வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது.

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

2021 ஜனவரியில் இலங்கையின் சட்டமா அதிபர் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பாக பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிட்டார்.

இராஜாங்க அமைச்சர்கள்

தற்போது கிராமப்புறசாலைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆவார். இவர் துப்பாக்கி முனையில் கைதிகளை மிரட்டியதையடுத்து 2021 செப்டெம்பரில் சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இவர் இப்போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

மேலும், புதிய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாத்திரத்திற்காக தற்போது பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மே 9ஆம் திகதி, கொழும்பில் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தாக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மே 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிஷாந்த, ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

கோட்டாபய ராஜபக்ச

இலங்கையில் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, பொருளாதார முறைகேடு, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இறுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் ஜூலை மாதம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க  பதவியேற்றார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க, எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக கலைக்க இராணுவத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏராளமானவர்களைக் கைது செய்ததன் மூலம் கடுமையான ஒடுக்குமுறையை ஆரம்பித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

அவர் கொடூரமான மற்றும் மதிப்பிழந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பை வெளியிடும் தலைவர்களை எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கிறார்.

இந்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த புதிய தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், மோசமான அமைச்சு நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US