தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் இலங்கை அரசையும் சிறை தண்டனையை தட்டி கேட்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (27.02.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனித சங்கிலி போராட்டம்
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையானது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டு முன்வைத்து தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது மட்டுமல்லாது இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் கடற்றொழிலாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அகில இந்திய கடற்றொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இலங்கை அரசையும், அதை தடுக்காத மத்திய அரசையும் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

