வாக்காளர் அட்டைகளை பெற்று கொள்ளாதவர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்று கொள்ளாத வாக்காளர்கள், உரிய பிரதேச தபால் அலுவலகத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபாலில் விநியோகிக்கும் பணிகள் கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பிரதேச தபால் அலுவலகம்
இந்நிலையில், வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்று கொள்ளாத வாக்காளர்கள், நவம்பர் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்கள் சில நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக் கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.


காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாவட்டத்தில் இருக்கிறது? News Lankasri
