பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவரின் பரிதாப நிலை
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற வேண்டிய பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள்
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளும் எரிபொருள் பற்றாக்குறை மின்சார தடை போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற சுற்றுலா பயணி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் சிக்கி தவித்துள்ளார்.
பிரித்தானியரின் கவலை
இது மிகவும் ஒரு நெருக்கடியான சூழலாகவே உள்ளதென குறித்த பிரித்தானியர் இலங்கை ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தன்னை போன்று அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வரிசையில் நிற்கின்றோம். காலை முதல் மாலை வரை வரிசையில் காத்திருக்கின்றோம்.
இலங்கை மக்களும் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
