முல்லைத்தீவு - பனிக்கன்குளம் வீட்டுத் திட்டத்தில் சமூக சீர்கேடு: மக்கள் விசனம் (Photos)
முல்லைத்தீவில் அரச உத்தியோகஸ்தர்களுக்கு அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் சமூக சீர்கேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பனிக்கன்குளம் கிராமத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு 2012இல் ஏ9 பிரதான வீதியில் பனிக்கன்குளம் பகுதியில் 54 காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா கடனும் வழங்கப்பட்டு, அமைக்கப்பட்ட வீடுகளில் எவரும் குடியேறாத நிலையில் பாழடைந்து காணப்படுவதோடு, சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எவரும் குடியேறவில்லை
இதில் சில வீடுகள் முழுமையாகப்
புனரமைக்கப்பட்ட போதும் அதில் எவரும் குடியேறவில்லை.
இதனால் குறித்த வீடுகளில் அதிகளவான
சமூக சீர்கேடுகளுக்கு வசதியாகவும் குறித்த வீடுகள் அதற்கென்றே
அமைத்துக்கொடுக்கப்பட்டவை போன்று செயற்பாடுகள்
காணப்படுவதாகவும் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகம் என்பன உரியக் கவனம் செலுத்திக் குறித்த வீடுகளை இதுவரை வீட்டுத்திட்ட உதவியினை பெறாததுள்ள வறிய குடும்பங்களுக்கு மாற்றம் செய்ய முன்வரவேண்டும் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயனை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த வீடுகள் யாருக்கு யாருக்கு வழங்கப்பட்டதோ அவர்களைக் குடியேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அல்லது அவர்கள் குடியேறாத சந்தர்ப்பத்தில் காணியற்ற ஏனைய பொது
மக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும்
குறித்த நடவடிக்கைகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.






சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
